Press "Enter" to skip to content

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது. 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை 17-ந் தேதி அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மாத பூஜையின் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைப்பார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூதபலி, உத்சவ பலியும், 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28-ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாத பூஜை மற்றும் விழா நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கணினிமய முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »