Press "Enter" to skip to content

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாமக நிர்வாகிகள் வருகை

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் உறுதிசெய்த பா.ஜ.க.வுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியின் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து இறுதி செய்வதற்கு இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ம.க.வுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »