Press "Enter" to skip to content

அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல்

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு நடக்கும் முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  
பா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் மந்திரியாக சர்பானந்த சோனாவால் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், முதல் மந்திரி சர்பானந்த சோனாவால் பா.ஜ.க. சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். மஜூலி தொகுதியில் போட்டியிடும் சர்பானந்த சோனாவால் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, டைம்ஸ் நவ் மற்றும் சி-ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் அசாமில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 67 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 57 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »