Press "Enter" to skip to content

ரெயில்வே திட்டங்களை முடிப்பதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்கதொடர்வண்டித் துறை மந்திரி வேண்டுகோள்

கடந்த 2013-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்தொடர்வண்டித் துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.45 ஆயிரம் கோடிவரைதான் ஒதுக்கப்பட்டது.

புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது,தொடர்வண்டித் துறை மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்தொடர்வண்டித் துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.45 ஆயிரம் கோடிவரைதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், வரும் நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள அனைத்துதொடர்வண்டித் துறை திட்டங்களையும் முடிக்க எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது. ஆனால் சில மாநில அரசுகள் ஒத்துழைப்பது இல்லை. மேற்கு வங்காளத்தில் ஒருதொடர்வண்டித் துறை திட்டம், 2014-ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. மாநில அரசு ஒத்துழைப்பது இல்லை. அப்படி இல்லாமல்,தொடர்வண்டித் துறை திட்டங்களை முடிக்க எல்லா மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »