Press "Enter" to skip to content

லால்குடி வேட்பாளரை திரும்பப்பெற பெற்றது அதிமுக

அதிமுக சார்பில் பெரம்பலூர் (தனி) தொகுதியில் இளம்பை ரா.தமிழ்ச்செல்வனும், தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடைநம்பியும் போட்டியிடுகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்தவண்ணம் உள்ளன.

ஆளுங்கட்சியான அதிமுக முதற்கட்டமாக 6 வேட்பாளர்களையும், 2ம் கட்டமாக 171 வேட்பாளர்களையும் அறிவித்த நிலையில் இன்று 3ஆம் கட்டமாக 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

பெரம்பலூர் (தனி) தொகுதியில் இளம்பை ரா.தமிழ்ச்செல்வனும், தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடைநம்பியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லால்குடி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ராஜாராம் அறிவிக்கப்பட்டிருந்தார். அந்த தொகுதி இப்போது தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டதால், வேட்பாளர் ராஜாராம் திரும்பப்பெற பெறப்படுவதாக அதிமுக  தலைமை அறிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »