Press "Enter" to skip to content

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல- ப.சிதம்பரம்

மின்மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள் என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

சென்னை:

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

* தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று அதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது. இது உண்மையா என்றால் உண்மையல்ல.

* தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

* 50% வெளி மாநிலங்களில் வாங்கும்போது எப்படி தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும்?   

* மின்மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள். அந்த  நிலையில் தமிழ்நாடு இல்லை என்பதே உண்மை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »