ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மாநில காவல் துறையினர் கூட்டாக இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்த் அங்கு சென்ற பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar