Press "Enter" to skip to content

உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.80 கோடியைக் கடந்துள்ளது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.80 கோடியைக் கடந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.32 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »