அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். அதற்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறார்.
அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கர்கள் அனைவருக்கும் மே மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று முதல் 3 வாரங்கள் வரை 90 சதவீதம் பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் உள்ளதால் ஏப்ரல் 19-ம் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து பெரியவர்களில் 90% பேர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar