Press "Enter" to skip to content

அமெரிக்காவில் விருந்து நடந்த வீட்டில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவில் விருந்து நடந்த வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வில்மிங்டன் நகரில் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த விருந்தில் 7 பேர் கலந்து கொண்டிருந்தனர். திடீரென அவர்களை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் விருந்தில் பங்கேற்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என தலைமை காவலர் டானி வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »