சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை) பெய்து வருகிறது.
சென்னை :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. இன்று அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி-நகர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar