Press "Enter" to skip to content

இன்று முதல் சுப்ரீம் நீதிமன்றத்திற்கு வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்

கடந்த ஆண்டு கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து சுப்ரீம் கோர்ட்டில் காணொலி விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி:

கடந்த ஆண்டு கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து சுப்ரீம் கோர்ட்டில் காணொலி விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. சில நீதிபதிகள் மட்டும் சுப்ரீம் நீதிமன்றத்திற்கு வந்து காணொலி வாயிலாக வழக்குகளை விசாரித்து வருகின்றனர். சில நீதிபதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு குடியிருப்புகளிலிருந்து காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே, கொரோனா 2-வது அலையால் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த பாதிப்பு சுப்ரீம் நீதிமன்றம் வளாகத்தையும் விட்டுவைக்கவில்லை. சுப்ரீம் நீதிமன்றம் வளாகத்தில் பணிபுரியும் சுமார் 44 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சுப்ரீம் நீதிமன்றம் வளாகம், நீதிபதிகள் அறை, நீதிமன்ற அறை என அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நீதிபதிகள் தங்களுடைய குடியிருப்புகளிலிருந்து காணொலி வாயிலாக வழக்குகளை விசாரிப்பார்கள். இதனால், காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் அமர்வுகள் 11.30 மணி தொடங்கும் என்றும், 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் அமர்வுகள் நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் என திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

மேலும் வழக்குகளை பட்டியலிட பதிவாளரிடம் நேரடியாக முறையீடும் முறையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்காலிகமாக நிறுத்திவைத்தும், காணொலி வாயிலாக முறையிட வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுப்ரீம் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் பொது நிர்வாகத்துக்கான உதவிப் பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுப்ரீம் நீதிமன்றம் வளாகத்தில் கீழ் கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுப்ரீம் நீதிமன்றம் வளாகத்துக்குள் வரும் பதிவாளர் அலுவலக ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட ஒருங்கிணைப்பு துறை அதிகாரிகள், வக்கீல்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும்.

சுப்ரீம் நீதிமன்றம் வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி, சோப்பு மற்றும் சானிடைஸரை கொண்டு அடிக்கடி கைகளை கழுவுதல் ஆகிவற்றை கடைப்பிடிப்பதை அவர்களின் மேலதிரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

காய்ச்சல், இருமல், உடல்வலி, ருசி மற்றும் நுகர்ச்சி இல்லாது போதல், பேதி போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் சுப்ரீம் நீதிமன்றம் வளாகத்துக்குள் வராமல் தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவ உதவியை நாட வேண்டும்.

சுப்ரீம் நீதிமன்றம் வளாகத்துக்குள் தேவையில்லாமல், நடமாடுவதோ, கூட்டம் கூடுவதோ, சுற்றித் திரிவதோ கூடாது. தேவைப்படும் பட்சத்தில் குறைந்த நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும்.

சுப்ரீம் நீதிமன்றம் வளாகத்துக்குள் இருக்கும் லிப்டுகளில் மேலே செல்ல மட்டுமே, அதுவும் ஒரே நேரத்தில் மூன்று நபர்களுக்கு பயன்படுத்த வேண்டும். கீழே இறங்க படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »