Press "Enter" to skip to content

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது

டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

புதுடெல்லி:

டெல்லியில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 19 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று இரவு டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. திங்கட்கிழமை காலை 5 மணி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும். 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, டெல்லியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபடுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »