Press "Enter" to skip to content

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 47 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது.

மாஸ்கோ:

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று குறைந்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 47,02,101 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 389 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 582 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 43,26,780 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,69,739 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »