முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இரண்டாவது அலை தன் கோர முகத்தைக்காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் மாநில முதல்வர்கள், மத்திய மந்திரிகள், திரைப்படம் பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து திரும்ப விரும்புகிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்புள்ள மருத்துவர் மன்மோகன் சிங்ஜி உடல்நலம் பெற்று, விரைவில் குணமடைந்து திரும்ப விரும்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு உங்கள் வழிகாட்டுதலும் ஆலோசனையும் தேவை என தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar