மணிப்பூரில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தலைமைச்செயலாளரும், மாநில நிர்வாகக் குழுத் தலைவருமான மருத்துவர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர், 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்தவோ, கலந்துகொள்ளவோ வேண்டாம் என்று முதல்-மந்திரி என்.பிரேன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா குறித்த மாநில ஆலோசனை குழுவின் கூட்டத்தையும் அவர் நேற்று முன்தினம் தலைமை தாங்கி நடத்தினார்.
கொரோனாவுக்கு எதிரான பணியில் முன்பு ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், நர்ஸ்களை மாநில அரசு மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. முன்பு, கொரோனா தாக்கம் குறைந்திருந்த நிலையில் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தலைமைச்செயலாளரும், மாநில நிர்வாகக் குழுத் தலைவருமான மருத்துவர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார். திருமணங்கள், இறுதிச்சடங்குகள், மத நிகழ்ச்சிகள் போன்ற தவிர்க்கமுடியாத நிகழ்வுகள் தவிர மற்றபடி மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிகழ்வுகளிலும், 20 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. கொரோனா கால வழிகாட்டு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாமல் யாரும் மணிப்பூருக்குள் நுழைவதற்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.
[embedded content]
Source: Maalaimalar