Press "Enter" to skip to content

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா- தலைமைச்செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

சென்னை: 

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு 98 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்தும் வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனையில் ஈடுபடுகிறார். 

ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »