Press "Enter" to skip to content

ஈரானை துரத்தும் கொரோனா – 25 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

ஈரானில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

டெஹ்ரான்:

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ஈரான் 14-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,99,077 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 407 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 19.54 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4.72 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »