Press "Enter" to skip to content

தேசிய ஆணழகன் ஜெகதீஷ்லாட் கொரோனாவுக்கு உயிரிழப்பு

மிக குறைந்த வயதில் ஜெகதீஷ் லாட் கொரோனாவுக்கு பலியானதால், சக பாடி பில்டிங் வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை:

தேசிய ஆணழகன் ஜெதீஷ்லாட். 34 வயதான இவர் குடுபத்தினருடன் பரோடாவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஜெகதீஷ்லாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

ஜெகதீஷ்லாட் சர்வதேச ஆணழகன் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றவர். மிஸ்டர் இந்தியா போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். மிக குறைந்த வயதில் ஜெகதீஷ் லாட் கொரோனாவுக்கு பலியானதால், சக பாடி பில்டிங் வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »