Press "Enter" to skip to content

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3வது வாரம் வெளியீடு – சிபிஎஸ்இ அறிவிப்பு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3-வது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு  மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தேர்வை 21,50,761 பேரும், பிளஸ் 2 தேர்வை 14,30,243 பேரும் எழுத இருந்தனா்.

இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதே நேரம், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்திவைக்கப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கொரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தேர்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3-வது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »