Press "Enter" to skip to content

ஜம்மு காஷ்மீர்- பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு:

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று மாலை தொடங்கிய இந்த சண்டை ஏறக்குறைய 6 மணி நேரமாக நீடித்தது.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்களை அடையாளும் காணும் பணி நடந்தது. இதில் அவர்கள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரிய வந்தது.

அவர்களில் ஒருவர் சோபோரின் ஹத்லாங்கூ பகுதியை சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதியான வாசிம் அகமது லோனே என்பதும், மற்றொருவர் வெளிநாட்டு பயங்கரவாதியான ஹமாஸ் என்ற அஸ்ரார் என்ற சரியா என்பதும் தெரிய வந்துள்ளது. சரியா கடந்த 2018ம் ஆண்டில் இருந்து வடக்கு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »