Press "Enter" to skip to content

சென்னை-மதுரை, தொடர் வண்டி உள்பட 74 சிறப்பு தொடர் வண்டி சேவைகள் ரத்து – தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக தொடர் வண்டிகளில் இருக்கைகள் நிரம்பாததால் 74 சிறப்பு தொடர் வண்டிகள் ரத்து செய்யப்படுவதாக தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக தொடர் வண்டிகளில் இருக்கைகள் நிரம்பாததால் 74 சிறப்பு தொடர் வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரெயில்களில் போதிய அளவு இருக்கைகள் நிரம்பாததால், சென்னை எழும்பூர்-காரைக்குடி (வண்டி எண்: 02605) சிறப்பு தொடர் வண்டி வருகிற 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், காரைக்குடி-எழும்பூர் (02606) சிறப்பு தொடர் வண்டி வருகிற 9-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-மதுரை (02613) மற்றும் மதுரை-எழும்பூர் (02614) சிறப்பு தொடர் வண்டிகள் வருகிற 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையும், எழும்பூர்-மதுரை (02635), எழும்பூர்-திருச்சி (02653) சிறப்பு தொடர் வண்டிகள் வருகிற 9-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 1-ந்தேதி வரையிலும், மதுரை-எழும்பூர் (02636), திருச்சி-எழும்பூர் (02654) சிறப்பு தொடர் வண்டிகள் வருகிற 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், எழும்பூர்-மதுரை (06157) சிறப்பு தொடர் வண்டி வருகிற 14-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், மதுரை-எழும்பூர் (06158) சிறப்பு தொடர் வண்டி வருகிற 13-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஈரோடு (02649), ஈரோடு-. சென்டிரல் (02650), சென்டிரல்-கோவை (02673), கோவை- சென்டிரல் (02674), சென்டிரல்-கோவை (02679), கோவை-சென்டிரல் (02680) சிறப்பு தொடர் வண்டிகள் வருகிற 8-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரல்-கோவை (02681) சிறப்பு தொடர் வண்டி 15-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரையிலும், கோவை- சென்டிரல் (02682) சிறப்பு தொடர் வண்டி 14-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரையிலும், சென்டிரல்-மதுரை (06019) சிறப்பு தொடர் வண்டி 10-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரையிலும், மதுரை-சென்டிரல் (06020) தொடர் வண்டி 11-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-நாகர்கோவில் (06063) சிறப்பு தொடர் வண்டி வருகிற 13-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-எழும்பூர் (06064) சிறப்பு தொடர் வண்டி 14-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், தாம்பரம்-நாகர்கோவில் (06191), எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஜோலார்பேட்டை (06089) சிறப்பு தொடர் வண்டிகள் 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06192), ஜோலார்பேட்டை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (06090), தாம்பரம்-நாகர்கோவில் (06065) சிறப்பு தொடர் வண்டிகள் 9-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06066) சிறப்பு தொடர் வண்டி 10-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (02698), எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம் (02695) சிறப்பு தொடர் வண்டிகள் 8-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம் (02697), திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (02696) சிறப்பு தொடர் வண்டிகள் வருகிற 9-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-புதுச்சேரி (06115) சிறப்பு தொடர் வண்டி 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், புதுச்சேரி-எழும்பூர் (06116) சிறப்பு தொடர் வண்டி 9-ந்தேதியில் இருந்து ஜூன் 1-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், எம்.ஜி.ஆர். சென்டிரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு (06075), கே.எஸ்.ஆர்.பெங்களூரு (06076), சென்டிரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (06079), கே.எஸ்.ஆர். பெங்களூரு-. சென்டிரல் (06080) சிறப்பு தொடர் வண்டிகள் வருகிற 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்டிரல்-மங்களூரு (06627) சிறப்பு தொடர் வண்டி 9-ந்தேதியில் இருந்து ஜூன் 1-ந்தேதி வரையிலும், மங்களூரு- சென்டிரல் (06628) சிறப்பு தொடர் வண்டி 8-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரல்-திருப்பதி (06095), திருப்பதி-சென்டிரல் (06096) சிறப்பு தொடர் வண்டிகள் வருகிற 8-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரத்தாகிறது. அதேபோல், சென்டிரல்-நிசாமுதீன் (06151) சிறப்பு தொடர் வண்டி 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும், நிசாமுதீன் – சென்டிரல் (06152) சிறப்பு தொடர் வண்டி 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 74 சிறப்பு தொடர் வண்டி சேவைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »