ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலை விட இந்தாண்டு மே மாத ஜிஎஸ்டி வசூல் 27.6 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி-வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மே மாதத்தில் 1 லட்சத்து 02 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. புத்தாண்டு முதல் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் மே மாத வசூலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மொத்த வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 17 ஆயிரத்து 593 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 22,653 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 53,199 கோடி ரூபாயும் அடங்கும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar