கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 196, கேரளாவில் 124 பேர் உள்பட நாடு முழுவதும் 624 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,11,408 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,792 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 9 லட்சத்து 46 ஆயிரத்து 74 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 14,539, மகாராஷ்டிராவில் 7,243, -ஆந்திராவில் 2,567, தமிழ்நாட்டில் 2,505, அசாமில் 2,169 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,26,220, கர்நாடகாவில் 35,944, தமிழ்நாட்டில் 33,502, டெல்லியில் 25,020, உத்தரபிரதேசத்தில் 22,704 பேர் அடங்குவர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar