Press "Enter" to skip to content

துருக்கியில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தைக் கடந்தது

துருக்கியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

அங்காரா:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா   இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.

  

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் துருக்கி தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்துள்ளது. 

அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 53.70 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »