ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாஸ்கோ:
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,704 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு மேலும் 799 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு கொரோனா தொற்றில் இருந்து 53 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar