ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதையடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
டோக்கியோ:
இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். கொரோனாவினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவலை வெளியிட்டு இருக்கும் போட்டி அமைப்பு குழுவினர் அவர் யார்? என்பது குறித்து எந்தவித விவரத்தையும் வெளியிடவில்லை.
ஒலிம்பிக் வீரர்கள் தங்கிய ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா, போட்டி அமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தில் தங்கியவருக்கு கொரோனா பாதிப்பு என்று செய்திகள் வெளியான நிலையில் முதல்முறையாக வாக்கு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவி இருப்பது பரபரப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar