Press "Enter" to skip to content

தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா

தமிழகத்தில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று  1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 37 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 27,282 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 2,558 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 76 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »