Press "Enter" to skip to content

இங்கிலாந்தில் ஒரே நாளில் 39,950 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

லண்டன்:

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 54.73 லட்சத்தைக் கடந்துள்ளது.

  

கொரோனா வைரசால் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,727 ஆக உள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து 44 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 9.40 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »