Press "Enter" to skip to content

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.22 கோடியைக் கடந்தது

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41.24 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.22 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து 17.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு இதுவரை 41.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களில் 1.31 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 81 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »