Press "Enter" to skip to content

மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி வாங்க முண்டியடித்த மக்கள்

மதுரையில் 5 பைசாவுக்கு கோழிக்கறி பிரியாணியை வாங்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமல் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

பக்ரீத் பண்டிகையையொட்டி மதுரையை சேர்ந்த அட்சயா என்பவர் செல்லூர் பகுதியில் புதிதாக பிரியாணி கடை திறந்தார். மேலும் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி 5 பைசா நாணயத்துடன் வருபவர்களுக்கு கோழிக்கறி பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் அங்கு பிரியாணி வாங்க 5 பைசா நாணயத்துடன் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். இதனை எதி்ர்பார்க்காத கடை ஊழியர்கள் திகைத்தனர்.
5 பைசா கொண்டு வரும் 50 நபர்களுக்கு பிரியாணி வழங்க முடிவு செய்திருந்த அவர்கள், கூட்டம் அதிகமாக கூடியதால் கடையின் கதவுகளை அடைத்தனர். அங்கு அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமல் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து செல்லூர் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை மூடப்பட்டதால் காவல் துறையினர் அங்கிருந்து அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »