Press "Enter" to skip to content

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை- ஓ.பன்னீர்செல்வம்

ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது.

சென்னை:

சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற ஆலோசனைக்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்.

* ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது.

* இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

* சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராக உள்ளது.

* எந்தவொரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் அரசியலில் அபாயகரமான சூழலை உருவாக்கும்.

* அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு ரெய்டு நடத்துவது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »