Press "Enter" to skip to content

சோதனை போட்டியில் வேகமாக 100 மட்டையிலக்கு – கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

இந்தியாவின் முன்னாள் கேப்டனான கபில்தேவ், 24 சோதனை போட்டிகளில் 100 மட்டையிலக்கு எடுத்துள்ளார்.

லண்டன்:

இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது சோதனை போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை விளையாடிக் கொண்டிருந்தது.

இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் மட்டையிலக்குடை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது மட்டையிலக்கு ஆகும்.

மேலும், 24 சோதனை போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 மட்டையிலக்கு வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதேபோல், இர்பான் பதான் 28 போட்டியிலும், முகமது ஷமி 29 போட்டியிலும், ஜவகல் ஸ்ரீநாத் 30 போட்டியிலும், இஷாந்த் சர்மா 33 போட்டியிலும் 100 மட்டையிலக்குகள் எடுத்துள்ளனர். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனைத்து வடிவ போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். தனது பந்து வீச்சில் பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறார் என இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் சமீபத்தில் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »