Press "Enter" to skip to content

துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

துருக்கியில் தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 66,36,899 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அங்காரா:

துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதனால் தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 66,36,899 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 259 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 30,144 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »