உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 16 லட்சத்து 1 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 50 லட்சத்து 65 ஆயிரத்து 957 ஆக அதிகரித்துள்ளது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 88 லட்சத்து 26 ஆயிரத்து 768 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 16 லட்சத்து 1 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 லட்சத்து 37 ஆயிரத்து 554 பேர் உயிரிழந்துள்ளனர்.
[embedded content]
Source: Maalaimalar