Press "Enter" to skip to content

தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் எதுவும் செய்ய முடியாது: அண்ணாமலை

தைரியம் இருந்தால் நீட் விவகாரத்தில் 2006-15 ஆம் ஆண்டு வரை நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள்? என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.

சென்னை :

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

2010-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. இருந்தது. நீட்டை தமிழக மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள்.

தைரியம் இருந்தால் நீட் விவகாரத்தில் 2006-15 ஆம் ஆண்டு வரை நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள்? என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.

நீட்டை காங்கிரஸ்-தி.மு.க. கொண்டு வந்தாலும் அது ஏழை மாணவர்களுக்கும், தமிழக மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது கிடையாது என்பது பா.ஜ.க.வின் கொள்கை ஆகும்.

தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் நீட், 3 விவசாய சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தில் தி.மு.க. அரசால் எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »