Press "Enter" to skip to content

மாநிலங்களவை தேர்தல் – புதுச்சேரி பாஜக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ செல்வகணபதி அறிவிப்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

புதுச்சேரி:

புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்களும், பா.ஜ.க.வுக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை சேர்த்து 9 பேரும் உள்ளனர்.

இந்த சூழலில் புதுவையில் இருக்கும் ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு இன்று நிறைவடைகிறது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் இடையில் மாநிலங்களவை எம்.பியை பெறுவதில் போட்டி நிலவியது. இரு  கட்சிகளும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. இடையே வேட்பாளரைத் தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக பா.ஜ.க.வின் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்படி புதுச்சேரி பா.ஜ.க. பொருளாளராக உள்ள செல்வகணபதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »