Press "Enter" to skip to content

மின்சார வாரியத்தை அதிமுக அரசு சீரழித்துவிட்டது- மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை:

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

* திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.

* புதிய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் மின்சாரத்தை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

* சூரிய சக்தி மின் உற்பத்திக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க உள்ளது.

* திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

* தமிழ்நாடு மின்வாரியத்தை அதிமுக ஆட்சியாளர்கள் முறையாக பராமரிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியாளர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தை  சீரழித்து விட்டனர்.

* அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டன.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »