Press "Enter" to skip to content

கோவா முன்னாள் முதல்வர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்

பிரதமர் மோடிக்கும் அவரது அதிகாரத்துக்கும் மம்தா பானர்ஜி கடும் சவால் அளித்தவர் என கோவா முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ தெரிவித்திருந்தார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவா மாநிலத்திலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தமுறை கோவா சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

கோவா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ பலேரோ கடந்த 27-ந்தேதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசிய சில மணி நேரங்களில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.

‘பிரதமர் மோடிக்கும் அவரது அதிகாரத்துக்கும் கடும் சவால் அளித்தவர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 200 கூட்டங்களை நடத்தினார். அமித் ஷா 250 கூட்டங்களை நடத்தினார். அத்துடன், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. கெடுபிடியும் இருந்தது. ஆனால், மம்தா வாய்ப்பாடு வெற்றி பெற்றுள்ளது’ என்று லூய்சின்ஹோ பேசியது குறிப்பிடத்தக்கது.

லூய்சின்ஹோ திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »