Press "Enter" to skip to content

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அமரீந்தர் சிங் திடீர் சந்திப்பு – பாஜகவில் இணைகிறாரா?

காங்கிரஸ் கட்சி தலைமை யாரை நம்புகிறதோ, அவரை முதல்வர் ஆக்கட்டும். இப்போதும் நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன்.

டெல்லி:

டெல்லியில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்துக்கு, வருகை தந்துள்ளார் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்.

பஞ்சாப் மாநில காங்கிரஸில் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், ‘நான் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன். காங்கிரஸ் கட்சி தலைமை யாரை நம்புகிறதோ, அவரை முதல்வர் ஆக்கட்டும். இப்போதும் நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்வேன்’ என்றார்.

இந்நிலையில் அவர் நேற்று பஞ்சாப்பிலிருந்து கிளம்பி டெல்லி வந்தார். தற்போது அவர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »