Press "Enter" to skip to content

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்வு- ஒரே நாளில் 311 பேர் பலி

கடந்த சில நாட்களாக கொரோனா புதிய பாதிப்பை விட நாள்தோறும் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த வகையில் நோய் பாதிப்பில் இருந்து நேற்று 28,718 பேர் மீண்டு வீடு திரும்பினர்.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 37 லட்சத்து 39 ஆயிரத்து 980 ஆக உயர்ந்தது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு 19 ஆயிரத்துக்குள் இருந்தது.

இந்நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 12,161, மகாராஷ்டிராவில் 3,187, மிசோரத்தில் 1,741, தமிழ்நாட்டில் 1,624, ஆந்திராவில் 1,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 155, மகாராஷ்டிராவில் 49 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 311 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,48,062 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,011 பேர் அடங்குவர்.

கடந்த சில நாட்களாக கொரோனா புதிய பாதிப்பை விட நாள்தோறும் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த வகையில் நோய் பாதிப்பில் இருந்து நேற்று 28,718 பேர் மீண்டு வீடு திரும்பினர்.

இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 898 ஆக உயர்ந்தது. தற்போது 2,77,020 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் கேரளாவில் மட்டும் 1.44 லட்சம் பேர் அடங்குவர்.

நாடு முழுவதும் நேற்று 65,34,306 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 88 கோடியே 34 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 15,06,254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 56.89 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »