Press "Enter" to skip to content

தொடர்ந்து 2-வது நாளாக கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு

தொடர்ந்து 2-வது நாளாக இன்று கல்லெண்ணெய், டீசல் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயரும் கல்லெண்ணெய், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சென்னை :

கல்லெண்ணெய், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, கல்லெண்ணெய், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கல்லெண்ணெய் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயரும் கல்லெண்ணெய், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் கல்லெண்ணெய் விலை 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 94.45 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று கல்லெண்ணெய், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் கல்லெண்ணெய் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58-க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94.74-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »