Press "Enter" to skip to content

மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை: பிரதமர் மோடி

மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று  மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தும் விதமாக டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்த நாளில், பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ‘‘மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை. மில்லியன் கணக்கானவர்களுக்கு வலிமை அளிக்கின்றன’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »