கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறையாத நிலையில் திரையரங்கம்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இன்று அம்மாநிலத்தில் புதிதாக 13,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,437 பேர் குணமடைந்துள்ளனர். 121 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,41,155 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 96,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு 15 ஆயிரத்திற்கு மேல் இருந்த நிலையில் தற்போது 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25-ந்தேதியில் இருந்து திரையரங்கம்கள், உட்புற அரங்கங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
திரையரங்கம் மற்றும் உட்புற அரங்கங்களில் வேலைப்பார்க்கும் நபர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தியிருக்க வேண்டும். 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar