மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் தின்ஹடா, சாந்திப்பூர், கர்தஹா மற்றும் கொசாபா என 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. தின்ஹடாவில் உதயன் குஹா, சாந்திப்பூரில் பிராஜ் கிஷோர் கோஸ்வாமி, கர்தஹாவில் சோபன்தேவ் சட்டோபாத்யாய், கொசாபாவில் சுப்ரதா மொண்டல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இடதுசாரி கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, தின்ஹடாவில் அப்துர் ராப், சாந்திப்பூரில் சவுமென் மகதோ, கர்தஹாவில் தேபஜோதி தாஸ் மற்றும் கொசாபாவில் அனில் சந்திர மண்டல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar