Press "Enter" to skip to content

ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் அறிவிப்பு

சீரடி சாய்பாபா கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மும்பை:

கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி சில முக்கிய கோவில்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் அக்டோபர் 7-ம் தேதி முதல் திறக்கப்பட்டு தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இணையத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »