Press "Enter" to skip to content

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.

சென்னை:

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். 9-ம் தேதி தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »