இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 205 நாட்களில் குறைவான பதிவாகும்.
கோப்புப்படம்
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 21,257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 205 நாட்களில் குறைந்த பதிவாகும்.
தற்போது இந்தியாவில் 2,40,221 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar