2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி விழுப்புரம் – 13.88 சதவீதம், கள்ளக்குறிச்சி – 12.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை:
நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.72 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
விழுப்புரம் – 13.88 சதவீதம், கள்ளக்குறிச்சி – 12.07 சதவீதம், காஞ்சிபுரம் – 10.51 சதவீதம், செங்கல்பட்டு – 6.85 சதவீதம்
நெல்லை – 6.59 சதவீதம், தென்காசி – 11.75 சதவீதம், வேலூர் – 8.05 சதவீதம், ராணிப்பேட்டை – 7.45 சதவீதம், திருப்பத்தூர் – 5.22 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar