Press "Enter" to skip to content

அத்துமீறிய பயணியால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

லாகார்டியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதும், அத்துமீறி நடந்துகொண்ட பயணியை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

நியூயார்க்:

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி நேற்று பயணிகள் விமானம் வந்தது. அதில் 78 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் பயணித்தனர். விமானம் நியூயார்க்கை நெருங்கியபோது, ஒரு பயணி அத்துமீறி நடந்துகொண்டார். அவரை விமான ஊழியர்களால் கையாள முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனால் குறிப்பிட்ட நேரத்தைவிட விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அத்துமீறி நடந்துகொண்ட பயணியை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »